பழனி, மே 3-
பழனி அருகே உள்ள என்.குரும்பபட்டியை சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது27). இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடு முறைக்காக ஊருக்கு வந்த வடிவேல் மே 3 அன்று காலை பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரை வழிமறித்து தாக்கி, அரிவாளால் வெட்டினர். வடிவேல் பேருந்து நிலையம் நோக்கி ஓடினார். ஆனால் அவர்கள் விரட்டிச்சென்று சரமாரியாக வடி வேலை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி யடித்து ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் போலீசார் வடிவேல் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்ப வம் தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.