திருச்சிராப்பள்ளி, டிச.5- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடை பெற்றது. அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கதுரை மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில், ‘‘திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சியில் முத்தரச நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க கட்டிட வளாகத்தில் நியாயவிலை கடையும், வாரச் சந்தையும் செயல்பட்டு வரு கிறது. இதனால் இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்கள் இங்கு வரு வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க வடிகால் குழாய் அமைத்து அருகில் உள்ள வடிகால் வாய்க்காலில் இணைக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.