districts

அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு உடனே தொகையை வழங்க வேண்டும் சிபிஎம் வேண்டுகோள்

கும்பகோணம், பிப்.24- கும்பகோணம் நாச்சியார் கோவில் பகுதிகளிலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்க ளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு ஒரு வார காலமாக பணம் தராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் கூறியுள்ளதாவது: ‘‘தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு நெல் கொள் முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது அரசு நெல் கொள் முதல்  நிலையங்களில் அப்பகுதி விவசாயிகளிடம் கடும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நெற்பயிர்களை வளர்த்த நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர் ஆனால், தமிழக அரசு விவசா யிகளின் ஆதரவாக பல திட்டங்க ளை அறிமுகப்படுத்தியும் தனி யார் வியாபாரிகள் நெல்லை குறைந்த விலைக்கு பெறுவதை தடுக்கவும் அரசு கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த பிப்ரவரி 18 முதல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை களுக்கு இதுவரை பணம் பட்டு வாடா செய்யப் படாமல் இருக்கிறது  இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் விசேஷ காலங்க ளில் பணத்தேவையை பூர்த்தி செய்யப்பட முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தமிழக  அரசும் தலையிட்டு திருவிடை மருதூர் தெற்கு பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் செய்யப் பட்ட மூட்டைகளுக்கு உடனடி யாக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்’’  இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.