districts

img

பெண் மீது தாக்குதல் குற்றவாளிகள் கைது கோரி ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.22-

    மேட்டு மாகாணபுரத்தில் சம்பூரணம் என்ற பெண் மீது சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிருஷ்ணாராபுரம் ஒன்றியக் குழு சார்பில் லாலாபேட்டையில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் எ.தர்மராஜ் தலைமை வகித்தார். லாலாப் பேட்டை கிளைச் செயலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு விளக்கிப் பேசினார். விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் பி.ராஜு, மாவட்டத் தலைவர் ஓ.கே.கண்ணதாசன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், ஒன்றி யத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் பட்டு, ரோகிணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.