districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு தஞ்சை மறவன்வயலில் போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 20-  

    சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மறவன்வயல் கிராமத்தில் அடிப்படை வசதி களை நிறைவேற்றக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

     தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், ராவுத்தன்வயல் ஊராட்சி, மறவன் வயல் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு செல்  லும், அரைகுறையாக நிறுத் தப்பட்ட சாலைப் பணியை  முழுமைப்படுத்த வேண் டும். குடிமனைப் பட்டா இல்  லாத ஏழை, எளிய மக்க ளுக்கு குடிமனைப் பட்டா  வழங்க வேண்டும். விவ சாயத் தொழிலாளர்களுக்கு  முழு சம்பளம், 100 நாள் வேலை  யில் காலை 6 மணிக்கு புகைப்  படம் எடுக்கும் நடைமுறை யை மாற்ற வேண்டும் என்  பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, அகில  இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் பூக்  கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு ஒன்றியத் தலை வர் கே.ராஜேந்திரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) ஆர்.எஸ்.வேலுச்சாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா வி.தொ.ச ஒன்றியச் செயலா ளர் பி.சேகர், ஏ.இளங்கோ வன், எம்.கணேசன், பி.பெரி யண்ணன், வி.நாகேந்திரன், வி.பி.நவநீதன் உட்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  

     தொடர்ந்து அதிகாரி கள் நடத்திய பேச்சுவார்த்  தையில், ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் மூலம் நிறை வேற்றப்பட வேண்டிய கோரிக் கைகள் உடனடியாக நிறை வேற்றித் தரப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம்  தேதி, பேராவூரணி வட்ட  அலுவலகத்தில், வட்டாட்சி யர் தலைமையில் நடை பெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம்” என உறுதி யளித்துள்ளனர்.