தஞ்சாவூர், மே.7 -
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், நம்ம ஊர் மக்கள் ஆட்சி யர் ஆர்.எஸ்.மலையப்பன் (இ.ஆ.ப) கலை-இலக்கிய இரவு சனிக்கிழமை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, மாலை ஐந்து மணிக்கு பெரியார் சிலையிலிருந்து தமுஎகச மாவட்டக் குழு உறுப்பி னர் ஆ.அருணா தேவி தலைமை யில், மாவட்டத் தலைவர் சா.ஜீவ பாரதி ஆட்டம், பாட்டம், பறை முழக் கத்துடன் பங்கேற்ற கலை இலக்கியப் பேரணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கலை இரவு நிகழ்விற்கு, கிளைத் தலை வர் வை.தம்பி அய்யா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கவிஞர் யாழன் வரவேற்றார். ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.ஜெயராமன் வாழ்த்திப் பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் இரா. விஜயகுமார் கலை இரவை துவக்கி வைத்தார். கிளைப் பொருளாளர் இரா.வசந்த குமார் நன்றி கூறினார்.
கலை இரவில் மக்கள் இசை பாட கர் சாமி.சத்தியமூர்த்தி குழுவினரின் மக்கள் இசை பாடல்கள், வெயில் பண்பாட்டு மையம் மணிகண்டன் மற்றும் கண்ணகி, அழகர், லெட்சும ணன், மாசி ராஜா, கிருபாகரன் ஆகி யோர் பாடினர். பவா செல்லதுரை மனம் நெகிழ கதை வாசித்தார்.
ஏர் நடத்திய போர்கள் என்ற தலைப்பில் தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம், நந்த லாலா ஆகியோர் பேசினர். தொ டர்ந்து ஓய்வு பெற்ற தமிழாசிரியர் எஸ்.தங்கராசு, ஓவியர் து.தங்கராசு, மக்கள் ஆட்சியர் குடும்பத்தினரு க்கு, மாநில துணைப் பொதுச் செய லாளர் களப்பிரன் நினைவுப் பரிசுகள் வழங்கி, பயனாடைகள் அணி வித்துப் பாராட்டினார்.
புதுகை பூபாளம் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள், கோவை மாற்றுக்களம் கலைக் குழுவினரின் நிஜ நாடகம், கொரடாச் சேரி மருதம் கலைக் குழுவினரின் பறையாட்டம், சிலம்பாட்டம், மயி லாட்டம், பொய்க்கால் குதிரை, ஒரத்தநாடு சோழா சிலம்பக் குழு வினர் சிலம்பாட்டம், பள்ளி மாண வர்களின் பட்டிமன்றம், வில்லுப் பாட்டு, கண்ணை கண்மணிகளின் கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, கவிஞர்கள் கவி முனி, செல்வ.செந்தில், சின்னராஜா, தனுஸ்ரீ, பாரதிதாசன், அண்ணாத்துரை, ஆம்பல் காமராஜ், ரமேஷ் பங்கேற்ற கவித்தூறல் நிகழ்வு நடைபெற்றது.
சுனந்தா சுரேஷ், பா. விஜயன், கு.சிவாஜி கணேசன், ச.கலா, கா. லெனின், செ.பெர்னாட்ஷா,வ.அர விந்த், ரெ.அய்யப்பன், சா.சசிக் குமார், ம.கீர்த்தனா பெர்னாட்ஷா, து.கவி யரசன் ரா.ஆனந்தராஜ் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.