districts

img

பட்டியலின மாணவரைத் தாக்கிய நபரை கைது செய்க

கும்பகோணம், ஆக.17-

     பட்டியலின மாணவரைத் தாக்கியவரைக் கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ஆகஸ்ட் 1ஆம் தேதி கும்ப கோணம் அருகே உள்ள அணைக் கரை மேல்நிலைப் பள்ளியில் மூலங்குடியைச் சேர்ந்த கல்லூரி யில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அபினாஷ் என்ற  மாணவர் தன்னுடைய சகோதரி யை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு  ஆசிரியரைப் பார்ப்பதற்காக பள்ளி  வாசலில் நின்று கொண்டிருந்துள் ளார்.

     அப்போது அவ்வழியே வந்த  அணைக்கரை விநாயகம் தெரு வைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தைச்  சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் நீ ஏன் வாசல்ல நிக்கிற என சொல்லி சட்டையை பிடித்து இழுத்து கடு மையாக அபினாஷை தாக்கி யுள்ளார்

    மாணவரைத் தாக்கிய சாதி ஆதிக்க சிந்தனையாளரைக் கைது  செய்ய வலியுறுத்தியும் நடவ டிக்கை எடுக்காத திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளரைக் கண்  டித்தும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி- மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பனந்தாள் (பொ) ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.பாரதி தலைமை வகித்தார். விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர்  செயலாளர் குட்டி குமார், துரையர சன், அமுதன், ஜே.சி.பி. லெனின், வழக்கறிஞர் மதியழகன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி, கும்பகோணம் மாநகர் செயலாளர் கே.செந்தில்குமார், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர், கே.சந்துரு, ஒன்றியச் செய லாளர் அன்புமணி, நீலப் புலிகள்  இயக்க நிறுவனர் ஏ.இளங்கோ வன் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.

    அணைக்கரை சம்பவத்தில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி  உண்மையின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டிய திருப்ப னந்தாள் காவல் ஆய்வாளர் ஷர்  மிளா, இப்பிரச்சனையில் தலையீடு  கோரி ஜனநாயக வழியில் ஆர்ப்  பாட்டம் நடத்தியவர்களை தடுக் கும் வகையில், வாகனத்தை குறுக்கே நிறுத்தி 25 காவலர்கள் சூழ்ந்து கொண்டு குறுக்கே கயிறை  கட்டி மாணவர்களையும், பங்  கேற்ற பொதுமக்கள், பெண்களை யும் மிரட்டி அச்சுறுத்தியுள்ளார்.