districts

img

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு ராணுவத்தினர் வருகை

அறந்தாங்கி, ஆக.24 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மகா ராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து ராணுவ வீரர்கள் வந்து, அறந்தாங்கி பகுதி யில் உள்ள கிராமப்புற மாணவர்கள், இளை ஞர்கள், பொறியியல், பாலிடெக்னிக் பட்ட தாரி இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரி வதற்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது பற்றியும், அப்பணிகளில் பணிபுரிவ தற்கான பயிற்சி வகுப்புகள் குறித்தும் விளக்கினர்.  அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் அனைத்து  வசதிகளும் செய்யப்பட்டு இருந்ததை பார்த்து, கல்லூரி முதல்வரை பாராட்டி, அனைத்து மாணவர்களுக்கும் மிகச்சிறந்த ராணுவ பயிற்சிக்கான திட்டத்தின் தக வல்களை கூறினர். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள திறன் மிகு வகுப்புகள், மூலிகை தோட்டம், பழத்தோட் டம் மற்றும் பூந்தோட்டம் ஆகியவற்றை பார்த்து பாராட்டினர்.