districts

img

அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளியில் பரிசளிப்பு விழா

அறந்தாங்கி, பிப்.24 - அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளி யில் கலை நிகழ்ச்சி மற்றும்  பரிசளிப்பு விழா நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி காரைக் குடி சாலையில் இயங்கி வரும் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாண வர்களுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் டி.என்.எஸ். நாகரா ஜன் தலைமை வகித்தார்.  பள்ளி ஒருங்கிணைப்பா ளர் என்.காமராஜ், நகர் மன்ற உறுப்பினர் கோ.துளசி ராமன், பள்ளி முதல்வர்  டோரா ஜெயகுமாரி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும்  பள்ளியில் சிறந்த மாண வர்கள், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர் மன்றத் தலைவர் இரா.ஆனந்த்,  ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமிசத்யமூர்த்தி, பட்டி மன்ற பேச்சாளர் காசாவ யல்குமார், பள்ளி முதல்வர் யோகராஜா ஆகியோர் பரிசு களை வழங்கி பாராட்டினர். டிஎன்எஸ் குழும நிர்வாக இயக்குனர் என்.ராஜா நன்றி  கூறினார்.