districts

அறந்தாங்கி ரயில்நிலையம் முன்பு அரசமரம் நடப்பட்டது

அறந்தாங்கி, ஜூன் 2-  

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம்  சார்பில் தாயகம் பள்ளி ரமேஷ் ஏற்பாட்டில் ரயில் நிலை யம் முன்பு அரசமரம் நடப்பட்டது.  

     நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் எஸ்.காம ராஜ், ரயில்வே சங்க தலைவர் ஏ.பி.ஆர்.ராஜ்குமார், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் என்.சந்திரமோகன், வர்த்தக சங்க செயலாளர் தவசுமணி, துணைத்தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் செயலாளர் வி.ஜி.செந்தில் குமார், எம்.ஆர்.எஸ்.சரவணன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.