பட்டுக்கோட்டை, ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில், பட்டுக்கோட்டை கோட்டத் திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் ஏப்ரல் 25 (செவ்வாய்க்கிழமை) காலை 11:30 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெற உள்ளது. அதே தினம் மாலை 3:30 மணிக்கு விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்திற்குட் பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.