districts

ஏப்.24 தமிழ்ப் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர், ஏப்.21-

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019 -2020, 2020-2021, 2021-2022, 2022-2023 ஆகிய நான்கு ஆண்டு களில் படித்தவர்களுக்கு பட்டங்கள் தற்போது வழங்கப் பட உள்ளது.

   இதன்படி ஏப்ரல் 24 அன்று காலை 10 மணிக்கு தமிழ்ப்  பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்த வர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர் கள், 45 இளங்கலை மாணவர்கள், 291, பி.எட் மாணவர் களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இதனைத் தொ டர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கு பட்டங்கள் வழங்கப் பட உள்ளது.

   தமிழ்நாடு ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகள் பல்கலை., துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில் செய்யப் பட்டு வருகிறது.