districts

விளையாட்டுப் போட்டி மாணவர்களுக்குப் பாராட்டு

பாபநாசம், ஆக.22-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற வட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டியில், பாப நாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் சாதனை படைத்தனர்.

     ரிங் பால் விளையாட்டில் 14 வயதிற்குட்பட்ட, ஒற்றை யர் பிரிவில் முதலிடமும், இரட்டையர் பிரிவில் இரண்டாமி டமும் பெற்றனர். அம்மாபேட்டையில் நடைபெற்ற 17 வய திற்குட்பட்ட கபடி போட்டியில் முதலிடமும், 19 வயதிற்கு  உட்பட்ட போட்டியில் கபடி போட்டியில் இரண்டாமிட மும், 17 வயதிற்குட்பட்ட செஸ் போட்டியில் இரண்டாமிட மும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்களை பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உட்பட ஆசிரி யர்கள் பாராட்டினர்.