தஞ்சாவூர், மே 6-
ஆதரவற்ற விதவைச் சான்று பெறுவதற்கு இணையவழி யில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் ஆதரவற்ற விதவைச் சான்று வழங்கிட நேரிடை யாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு சான்றுகள் வழங்கும் நடை முறை இருந்து வந்தது. தற்போது ஆதரவற்ற விதவைச் சான்று கள் இ-சேவை மையத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப் பித்து இணையவழியில் சான்றுகள் வழங்கிட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் ஆதரவற்ற விதவைச் சான்று பெறுவது தொடர்பாக தங்க ளது பகுதிக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்க ளில் இணைய வழியில் விண்ணப்பித்து, இணைய வழியில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.