districts

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

 திருச்சிராப்பள்ளி, மார்ச் 6- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கான துரிதமின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிரா விடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைசார்ந்த விவசாயிகளாகவும் விவசாயநிலம் மற்றும் நிலப்பட்டா  அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு  வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்புக்கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், “அ” பதி வேடுநகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண்,  மின்வாரியத்தில் பதிவுசெய்த ரசீது நகல் மற்றும்  புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத் தினை பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

;