districts

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி,மார்ச் 24-  மத்திய அரசின் பணியா ளர் தேர்வாணையம்  மூலம் 5,000க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு அறிவிப் பாணை வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலி யிடங்களு க்கு 10-ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதிற்குட்பட்ட அனை த்து வேலைநாடும் இளைஞர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 27.3.2023 வரை விண்ணப் பிக்கலாம். தொலைதூரத் தில் வசிக்கும் வேலைநாடு நர்கள் பயன்பெறும் வகை யில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடக்குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல் முந்தைய ஆண்டு வினாத் தாட்கள், பயிற்சி வகுப்புக ளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (https://tamilnaducareer services.tn.gov.in)  உள்ளன. இதனை பதிவி றக்கம் செய்து பயனடையு மாறும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த போட் டித்தேர்வுகளுக்கு தயாரா கும் வேலைநாடுநர்கள் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும்; மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு வரும் ளுளுஊ  போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் அடையலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தினை நேரி லோ அல்லது 0431-2413510, 94990-55901 ரூ 94990-55902 என்ற தொலைபேசி எண்களை  தொடர்பு கொள்ளலாம்.