அறந்தாங்கி, ஆக.31 - அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி நடை பெற்றது. அறந்தாங்கி தவ்ஹீத் மர்கஸி லிருந்து ஆரம்பித்து அக்னி பஜார், பெரிய கடைத்தெரு, எம்ஜிஆர் சிலை, கட்டுமாவடி முக்கம் வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் முகமது மீரான் உட்பட நூற்றுக்கணக்கானோர், போதை பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேர ணியாக சென்றனர். பேரணியின் இறுதியில் மாநிலப் பேச்சாளர் அப்துல் ரஹ்மான் உரை யாற்றினார். அறந்தாங்கி போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.