மயிலாடுதுறை, ஏப்.3- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி அருகே யுள்ள காழியப்பநல்லூர் டான் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் வாலிபர் சங் கத்தின் சார்பில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் திங்களன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் டேனியல் செபா ஸ்டியன், கல்லூரி நெறியா ளர் பிரின்ஸ் ராஜா, கல்லூரி முதல்வர் வெண்ணிலா மற் றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட் டனர். மாவட்டச் செயலாளர் ஏ. அறிவழகன், மாவட்டத் தலைவர் எம்.ஐயப்பன், ஒன்றியச் செயலாளர் பவுல் சத்யராஜ், ஒன்றியத் தலை வர் ரஷ்யா, ஒன்றியப் பொரு ளாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.