பெரம்பலூர், அக்.29 - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வாரம் அக்.28 முதல் நவ.3 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பெரம்பலூரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தொடங்கிய பேரணிக்கு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமை வகித்தார். சார் ஆட்சியர் கோகுல் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, துறையூர் சாலை வழியாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியில் நிறைவடைந்தது. கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.