தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழியை முதன்மை தணிக்கை அலுவலர் எஸ்.சிவக்குமார் தலைமையில் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள்-நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.