திருச்சிராப்பள்ளி, மே 31-
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசின் மூலமாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்-2023-24 அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொரு ளாதார மேம்பாட்டை உயர்த்திடும் வகையில் தொடங் கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உற்பத்தி சேவை வணிக நிறுவனங்கள் தொடங்கவும், விரிவுபடுத்தவும் இயந்திரங்கள் மற்றும் உப கரணங்களை வாங்குவதற்கு 35 சதவீத மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப் படுகிறது.
இத்திட்டத்தில் பயனடைவோர் பட்டியலினத்த வர் அல்லது பழங்குடியினராக இருத்தல் வேண்டும். கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை. ஆரம்பிக்கப் படும் நிறுவனங்கள் தனி உரிமை,பங்குதாரர் கூட்டாண்மை மற்றும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருக்க லாம். வயதுவரம்பு 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். புதிய நிறுவனங்களாகவும் அல்லது ஏற்கனவே இருக்கின்ற நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் கட னுதவி வழங்கப்படும்.
எனவே, தகுதி மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் இத்திட்டத்தின் பயனை கருத்தில் கொண்டு, வங்கிகள் மூலமாக தமிழ்நாடு அரசின் மானியத்தோடு, மிக குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்ற கடனை பெற்று தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் எனவும், மேலும் பச்சமலை பகுதியில் வாழும் பழங்குடியினர் தொழில் தொடங்குவதற்கு அவர்கள் இடத்திலேயே முகாம் அமைத்து, ஆர்வமுள்ள தொழில் முனைவோரை கண்ட றிந்து அவர்களுக்கு வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்தார்.