கும்பகோணம், மே 9- தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை பொறியியல் கல்லூரியில் 36 ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் 2024 போட்டியை நடத்தின. போட்டியை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி வைத்து, வாழ்த்துரை ஆற்றினார். கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி தலைவர் இஜாஸ் அகமது, தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் இணைச் செயலாளர் செந்தில்குமரன் பழனிவேலு, தலைமை நடுவர் சதீஷ், விழாக்குழு தலைவர் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் தரும.சிலம்பரசன் மற்றும் விழாக் குழு நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.