districts

img

ஏழை மக்களுக்கு பயனளிக்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்

தஞ்சாவூர், நவ.5 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சாதனைச் சிகரங்களில் ஒன்றாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த  ஜூன் 6 அன்று, 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி விக்கையில், தஞ்சாவூர் மாநக ராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி, சீனி வாசபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், வண்டிக்காரத் தெரு,  சின்னையா பிள்ளை தெரு, அண்ணா  நகர், ஏ.ஒய்.ஏ நாடார் ரோடு, பூமால் ராவுத்தன் கோவில் தெரு,  நாலுகால் மண்டபம் ஆகிய 6 இடங்க ளிலும், கும்பகோணம் மாநகராட்சி யில் 1, பட்டுக்கோட்டை நகராட்சியில் 1 நகர்ப்புற நல வாழ்வு மையம் என மொத்தம் 8 இடங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு  சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப்  பணியாளர் என 500 மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 500 தூய்மைப்  பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். காலை 8 முதல் 12 மணி வரையி லும் மாலை 4 முதல் 8 மணி வரையி லும் இம்மையம் செயல்படும். இம்மையங்களின் மூலம் இப்பகுதி யில் வாழும் சுமார் 25 ஆயிரம் மக்கள்  பயன்பெறுகின்றனர். மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத் தினருக்கான சேவைகள், குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள்,  கண், காது, மூக்கு, பல், வாய்  மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவை கள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு மருத்துவ  வசதிகளை குடிசைவாழ் மற்றும்  நலிந்த மக்கள் தரமான முறையில்  பெறுவதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையங்களின் துணை மையங் களாக செயல்பட்டு, அனைத்து அத்தி யாவசியமான ஆரம்ப சுகாதார சேவைகளை மக்கள் தங்கள் வசிப்பி டத்திற்கு அருகிலேயே பெறுவ தற்கு உதவிகரமாக அமைந்துள் ளது” என்றார். புறநோயாளிகள் பிரிவு, ஊசி போடும் அறை, மருத்துவர் அறை,  மருந்து கட்டு கட்டும் அறை, மருத்து வர் அறை, பண்டக இருப்பு, கர்ப்பிணி பரிசோதனை அறை, மருந்த கம் என, மருத்துவமனையின் அத்தனை  அமைப்புகளையும் கொண்டதாக “நகர்நல மையம்” விளங்குகிறது. இதுகுறித்து மருத்துவர் வி.எஸ். வெங்கடேஷ் கூறுகையில், “நாள் தோறும் பொதுமக்களுக்கு சிகிச்சை  அளிக்கப்படுகிறது. 105 வகை யான மருந்துகள் இருப்பில் உள்ளன.  14 வகையான மருத்துவ பரிசோ தனைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை களில் மருத்துவ முகாம் நடத்தப்படு கிறது. ஏராளமான பொதுமக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்ற னர்” என்றார். இதுகுறித்து அண்ணா நகர் 4  ஆம் வீதியைச் சேர்ந்த சகாயராணி  (51) என்ற பயனாளி தெரிவிக்கை யில், எனக்கு சளி, இருமல், காய்ச்சல்  வரும் நேரங்களில் இந்த மையத் திற்கு வந்து சிகிச்சை பெற்று நலம்  பெற்றேன். தற்போது எனக்கு சர்க்கரை பாதிப்பு இருப்பதால் மாத்திரைகள் பெற்று நல்ல முறை யில் சிகிச்சை பெற்று வருகிறேன். தனியார் மருத்துவமனைக்கு இணையாக எவ்வித கட்டணமு மில்லாமல் அரசு சார்பில் எங்கள்  பகுதியில் இந்த மருத்துவ மையத்தை அமைத்த முதலமைச்ச ருக்கு நன்றி” என்றார்.  தொகுப்பு: ரெ.மதியழகன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்.