districts

அம்மாபேட்டை ஒன்றியத்தில் 31 பேர் சிபிஎம்-ல் இணைந்தனர்

தஞ்சாவூர், ஏப்.27-  

  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் மேலகலக்குடி கிராமத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, 31 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தனர். தொடர்ந்து புதிய கிளை துவக்கப்பட்டது.

  அம்மாபேட்டை ஒன்றி யம் மேலகலக்குடி கிராமம் பேருந்து உள்ளிட்ட அடிப்  படை வசதிகள் இல்லாத கிரா மமாகும். கடந்த பல ஆண்டு களாக இந்தப்பகுதிகளின் அடிப்படை வசதிகளுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றி யக்குழு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது.

  இதில் ஈர்க்கப்பட்ட பல்வேறு கட்சிகளில் இருந்த  இளைஞர்கள், பெண்கள் என 31 பேர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து கொண்டனர்.

  புதிய கிளை அமைப்பு கூட்டம் புதன்கிழமை மேல கலக்குடியில் கே.வினோத் குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.வி.கண்ணன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சரவணன் உள் ளிட்ட கலந்து கொண்டனர். மேலகலக்குடி கிளையின் செயலாளராக கே.வினோத்  குமார் தேர்வு செய்யப்பட்டார்.