பொன்னமராவதி, ஆக.26 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் ச.மரிய புஷ்பம் தலைமை வகித்தார். கவிஞர் தங்கம் மூர்த்தி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற் றார். பொன்னமராவதி ஒன்றியக் குழு தலை வர் சுதா அடைக்கலமணி, தமிழ்ச்செம்மல் விருதாளர் நெ.ராமச்சந்திரன், தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவர் கீதா சோலை யப்பன், முத்தமிழ்ப் பாச றைத் தலைவர் பி.மாரி முத்து, வழக்கறிஞர் ராஜா ஆதிமூலம், நாட்டினக் காளை கள் பாதுகாவலர் கணேஷ் கருப்பையா, பங்குத் தந்தை யர்கள் டி.ஜோசப், எஸ்.வில்சன், அருள்சகோதரி ஜூலியட் தவமணி தேவி, வர்த்தகர் கழகத் தலைவர் எஸ். கே.எஸ்.பழனியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் விடியல் ராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்வினை பள்ளியின் துணை முதல்வர் ஆர்.பிரின்ஸ் தொகுத்து வழங்கினார்.