districts

img

ஓரியண்டல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

மயிலாடுதுறை, செப்.21 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் அருகேயுள்ள ஆக்கூர் ஓரியண்டல்  அரபி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட  இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திக்கும் விழா மற்றும் ஆங்கில வழி கல்விக்கான புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.  இப்பள்ளியில் 1962ம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள முன்னாள், இந்நாள் மாணவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரான தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல்ரஹ்மான் கலந்து  கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.  விழாவில் மௌலானா அபுல் கலாம்  ஆசாத் கிராம கமிட்டி தலைவர் எ.எம். சிஹா புதீன் தலைமை வகித்தார். தலைமையா சிரியர் ஷாஜகான் வரவேற்றுப் பேசினார். தொ டர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலை வர் சந்திரமோகன், ஆசாத் கிராம கமிட்டி யின் நிர்வாகிகள், ஆக்கூர் ஜமாஅத் நிர்வாகி கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தமிழரசன் நன்றி கூறி னார்.

;