தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம், தாராசுரம் கிளையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு தினம் மற்றும் 50 ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு மாதர் சங்க கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகரத் தலைவர் ஏ.எஸ். சுமதி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி சங்க கொடியேற்றினார். மாநகர குழு உறுப்பினர்கள் அ.ஜோதி, கே.ரத்தினகுமாரி, எஸ்.சந்தனமாரி, ஆர்.தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.