மயிலாடுதுறை, பிப்.9- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 40 ஆவது ஆண்டு மாணிக்க விழா வியாழனன்று காலை துவங்கியது. விழாவில், நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் முனைவர். எஸ்.பி.பாஸ்கர், ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீதி.முத்துகணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக் கான பட்டங்களையும், பரிசுகளையும் சங்கரன்பந்தல் அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.கார்த்திக், நிர்வாகக்குழு உறுப்பினர் ரம்யா ஆகியோர் வழங்கினர். பள்ளியின் முதல்வர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணியை கலைமகள் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் மு.செந்தமிழ்செல்வி துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணியை கல்வி நிறுவன இயக்குநர் என்.எஸ்.குடியரசு முடித்து வைத்தார்.