கரூரில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி
இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணிக்கு ஆதரவாக, கரூர் பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். அப்போது அமைச்சர் உதயநிதி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஜோதிமணிதான் இப்போது மீண்டும் போட்டியிடுகிறார். ஒன்றிய பாஜக அரசை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதே நம் குறிக்கோள். திமுக ஆட்சியில்தான் மணப்பாறை - துவரங்குறிச்சி வரை புதிய நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.110 கோடியில் நடந்து வருகிறது. கரூருக்கு வேளாண்மைக் கல்லூரியும் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் 2008 ஆம் ஆண்டில் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டிக் கொடுத்தார். காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான கால்வாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட உள்ளன. நூறு நாள் வேலைத் திட்டத்தில், பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தி ஊதியம் ரூ.400 வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார். நிச்சயம் உங்களுக்கு முதல்வர் செய்து கொடுப்பார். செந்தில்பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். திமுக அவரை கைவிடாது. பொய் வழக்கை எல்லாம் உடைத்து, கரூர் தொகுதி வேட்பாளரின் வெற்றி விழா நடக்கும். அதற்கு செந்தில்பாலாஜிதான் தலைமையேற்பார்” என்றார். கரூர் தொகுதி திமுக பொறுப்பாளர் எம்.எம்.அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்
கும்பகோணம் ஏப்.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும் ஒப்பிலி யப்பன் கோயில் வெங்கடா ஜலபதி சுவாமி கோயிலின் பங்குனி பிரமோற்சவ தே ரோட்டம் நடைபெற்றது. இத்தலத்தில் இந்த ஆண்டு பங்குனி பிர மோற்சவ பெருவிழா, மார்ச் 27 அன்று கொடியேற்றத் துடன் தொடங்கி யது. விழாவின் 9 ஆம் நாளான திருவோணத்தை முன்னிட்டு, முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த னர். தொடர்ந்து கோயில் புஷ்கர்னியில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பெற்றோருக்கு மாணவர்கள் கடிதம்
கும்பகோணம் ஏப்.5- தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் பொது மக்களிடையே வாக்களிப்ப தன் அவசியத்தை வலியு றுத்தி, ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ -மாணவிகள் தங்கள் பெற் றோருக்கு கடிதம் எழுதி யுள்ளனர். அதில், “தங்கள் பெற்றோர்களை ஏப்.19 அன்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க கோரியும், நீங்கள் வாக்க ளித்த பிறகு வீட்டிற்கு வரு வதை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்.8 இல் உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை, ஏப்.5 - நார்த்தாமலை தேர்த் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற ஏப்.8 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 13.4.2024 (சனிக் கிழமை) அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமை களை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 14.4. 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப் படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் என வும் தெரிவிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகள், நாடாளு மன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள், பணி யாளர்களுக்கு மேற்படி விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான 8.4.2024 (திங்கட்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவ லர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும், அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்த ரூ.5.46 லட்சம் விடுவிப்பு
தஞ்சாவூர், ஏப்.5- நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5.46 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, வியாழ னன்று விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை கனரக வாக னங்களைப் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக ரூ.89 ஆயிரம், ரூ.63,800, ரூ.2,33,800, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என மொத்தம் ரூ.5,46,600 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறை யீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகை கள் உடனடியாக விடுவிக்கப்பட்டன.
செம்பனார்கோவிலில் காவல்துறை கொடி அணிவகுப்பு
மயிலாடுதுறை, ஏப்.5 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் துணை ராணுவப்படை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு வெள்ளியன்று நடைபெற்றது. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உறுதி செய்யும் வகையில் காவல் துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட செம்பனார்கோவில் கடைவீதியில் இருந்து, காவல் நிலையம் வரை காவல்துறையினர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திருப்பதி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சுப்ரியா (பொறுப்பு) காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 75 பேர் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரியில் 114 வயது மூதாட்டி மறைவு
திருவாரூர், ஏப்.5 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அரவனங்காடு ஊராட்சி செம்மங்குடி கிராமத்தில் வசித்து வந்த மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தோழர் முத்துசாமி. இவரது துணைவியார் எம்.கங்கையம்மாள், வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 114. இவர் முன்னாள் ஊராட்சித் தலைவரும் சிபிஎம் மூத்த தோழருமான எம்.தருமையன், அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்ட செயலாளர் எம்.கணேசன், தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராமமூர்த்தி ஆகியோரின் தாயார் ஆவார். அம்மையாரின் மறைவு செய்தி அறிந்த, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ்.செந்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜீ.வெங்கடேசன் மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை மாலை அன்னாரது இறுதிநிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த கங்கையம்மாள் தனது 114 வயது வரை, எந்தவித ஆங்கில மருந்துகளும் உட்கொள்ளாமல் எளிமையாக வாழ்ந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் விதிமுறைகளால் ஆடு வியாபாரிகள் தவிப்பு
புதுக்கோட்டை, ஏப்.5 - தேர்தல் விதிமுறைகளின் காரணமாக, ஆடு வியாபாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். புதுக்கோட்டை வாரச் சந்தையான வெள்ளியன்று ஆட்டுச் சந்தையும் நடை பெறும். இந்த சந்தைக்கு புதுக்கோட்டை மாவட் டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஆடுகளை விற்கவும், வாங்க வும் வந்து செல்வது வழக்கம். இந்நிலை யில் வெள்ளிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. ரமலான் பண்டிகையை யொட்டி, 1.25 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக, கடந்த வாரத்தை விட தற்போது ஆடு ஒன்றிற்கு எடைக்கு தகுந்தாற்போல் 400 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை அதி கரித்துள்ளது. அதே நேரத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து வர முடியாத நிலை இருக் கிறது. இதனால் ஆடுகள் வாங்க வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், எடுத்துச் செல்லும் தொகையை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், கள்ள மது அழிப்பு
தஞ்சாவூர், ஏப்.5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவ தாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பட்டுக்கோட்டை மது விலக்கு காவல்துறை ஆய்வாளர் ஜெயா தலைமையிலான மதுவிலக்கு காவல்துறை யினர் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகு தியில் நின்றிருந்த வாகனம் ஒன்றை சோத னையிட்டனர். அதில் போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம் அணைவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு பிரிவினர் சோதனை நடத்தி, பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி லேபிள் ஒட்டப்பட்ட 620 எண்ணிக்கை யிலான குவார்ட்டர் மது பாட்டில்களையும், 4 பிளாஸ்டிக் பேரல்களில் போலி மது தயா ரிக்க வைத்திருந்த 680 லிட்டர் எரிசாரா யத்தையும் கைப்பற்றினர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை மது விலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்து என்ற தீனா, பாலமுருகன், சேகர், வீரன் என்ற பால கிருஷ்ணன், ராஜ்குமார், சங்கர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து பேராவூரணி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பட்டுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கைப்பற்றப்பட்ட எரி சாராயம், போலி மது பாட்டில்களை, வெள்ளிக் கிழமை அன்று மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அழ கேசன், பேராவூரணி வழக்கறிஞர் சங்க செய லாளர் சிவேதி நடராஜன் ஆகியோர் முன்னி லையில், பேராவூரணியில் தரையில் குழி தோண்டி எரிசாராயத்தையும், போலி மது பாட்டில்களையும் கொட்டி அழித்தனர்.