districts

img

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: கும்பகோணம் விவசாயிகள் அஞ்சலி

கும்பகோணம், செப்.29- இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழனன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கணேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், கரும்பு ஆலை விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் ராஜா குணசேகரன் உட்பட விவசாயிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.