பெரம்பலூர், ஜூலை 26 -
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தில் வேளாண் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெ றும் வகையில், நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள், பதப்படுத்துப வர்கள் பயன்பெறும் வகையில் திருச்சியில் விவசாய கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில், வேளாண்மையை எளிமைப் படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமா னத்தை பெருக்குவதற்கான வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள், பாரம்பரிய மரபுசார் தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய உணவு அரங்குகள், வேளாண் மானிய உதவி பெற முன்பதிவு, விவசாயிகள் கருத்தரங்கு, விவசாயிகள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் இக்கண்காட்சி யில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவ லுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.