இரு வாரங்களுக்கு பின் கடலுக்குச் சென்ற தஞ்சை மீனவர்கள்
தஞ்சாவூர், டிச.2 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வு, கட்டுப்படி யான விலை கிடைக்கவில்லை. இலங்கை கடற்படையின ரால் மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக, தஞ்சை மாவட்ட மீன்வளத் துறையினர் விசைப்படகு மீன வர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. தற்போது ஃபெஞ்சால் புயல் கரையை கடந்த நிலை யில், தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திங்கள்கிழமை மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள், மீனவக் கிராமங்களில் இருந்து நாட்டுப் படகுகள் 15 நாட்களுக்குப் பின்னர் கடலுக்குச் சென்றன. இதேபோல் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை பகுதி விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
முன்னதாக மீனவர்கள் அவர்களுக்கு தேவையான டீசல், ஐஸ், உணவு, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங் களை படகுகளில் ஏற்றிச் சென்றனர்.
உயர் கல்விக் கடன் பெற
தஞ்சையில் 4,488 பேர் விண்ணப்பம்
தஞ்சாவூர், டிச.2 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உயர்கல்வி கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப் பங்களின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது.
மகளிர் திட்டம் திட்ட அலுவலர் எஸ்.சாந்தி, முன்னோடி வங்கி மேலாளர் ர.பிரதீப் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கை யில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயில்வதற்காக கல்விக் கடன் வசதி வேண்டி, வித்யா லட்சுமி இணைய தளம் மூலம் 4,129 விண்ணப்பங்களும், ஜன் சமர்த் இணைய தளம் மூலம் 359 விண்ணப்பங்களும் பல்வேறு வங்கிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரங்கள் குறித்தும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், மாவட்டத்தின் முன்னோடி வங்கி யான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியோரின் கூட்டு முயற்சியால் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களின் நிலை குறித்தும், அந்தந்த விண்ணப்ப தாரர்களிடம் அலைபேசியின் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது.
இதன்மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்விக் கடனுக் காக விண்ணப்பித்துள்ள 4,488 விண்ணப்பங்களின் நிலை குறித்து விவரம் சேகரிக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் தொடர்பாக விரைந்து பரிசீலிக்க சம்பந்தப் பட்ட வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
வேலைகேட்டு மனு அளித்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்
விருதுநகர், டிச.2- காரியாபட்டி அருகே உள்ளது ஆவியூர். இங்குள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் வளர்மதி, இவர் ஆட்சியரிடம் அளித்த மனு வில், நான் பிளஸ் 2 முடித்துள்ளேன். 2022ல் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிந்துள்ளேன். எனக்கு 2 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளனர். இவர் களை பார்த்து கொண்டும், மருத்துவ சேவை செய்யவும் நேரம் சரியாக உள்ளது. எனவே, வசிக்கும் பகுதியில் உள்ள ரேசன் கடையில் வேலை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளர்கள் ஆலோசனை
இராமநாதபுரம், டிச.2- இராமநாதபுரம் மாவட் டம் திருவாடானையில் சிஐடியு இ.பி.எஸ் பென்ஷன்தாரர்கள் சங்கத்தின் (ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளர்கள் ) சார்பில் மாவட்டத் தலைவர் ஷாஜஹான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
மாவட்டச் செய லாளர் வெங்கட சுப்பிர மணி, முத்துராமு மற்றும் சிவசாமி சந்தனம், இராம லிங்கம், பெரியசாமி, குப்புச் சாமி, உட்பட 70 க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு குறைந்த பட்ச பென்சன் ரூ.9,000 அறி விக்காமல் காலம் கடத்து வதை கண்டித்தும், உடன் அறிவிக்க கோரியும் மாநில அரசு ரூ.2,000 வழங்கிட வலியுறுத்தியும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள பி.எப்.அடீசனல் கமிசனர் அலுவலகம் முன்பு டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெ றும் காத்திருப்பு போராட்டத் தில் 100 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
லயன்ஸ் பள்ளி ஜூடோவில் அபாரம்
ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.2- விருதுநகர் வருவாய் மாவட்டம் சிவகாசி ஜேசிஸ் பள்ளியில் மாவட்ட அளவில் ஸ்ரீவில்லி புத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு, இராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் பகுதி களில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஜூடோ போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்ரீவில்லி புத்தூர் லயன்ஸ் பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு பதக் கங்களை வென்றனர்.
14 வயது 50 கிலோவிற்கு கீழ் உள்ள எடை பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாண வன் அகில், 19 வயது 90 கிலோ விற்கு மேல் உள்ள எடைப் பிரிவில் 12 ஆம் வகுப்பு மாணவன் அஸ்வின் முதல் இடங்களை பிடித்து மாநிலப் போட்டிக்கு தேர்வாகினர். 14 வயது முப்பது கிலோவிற்கு கீழ் உள்ள எடை பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவன் மாதேஷ் ஆதித்தன், 50 கிலோவிற்கு மேல் உள்ள எடை பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவன் சாய்சரண், 17 வயது 50 கிலோவிற்கு கீழ் உள்ள எடை பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ராஜேஷ் இரண்டாம் இடங்களை பிடித்தனர்.
போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த மாணவர்களை லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், தாளாளர் வெங்கடாஜலபதி, பள்ளியின் இயக்குநர் கோபால கிருஷ்ணன், பள்ளியின் முதல்வர் சுந்தரலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன், ஜூடோ பயிற்சி யாளர் வினோத் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்
எச். ராஜாவுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை!
சென்னை, டிச. 2 - வாய்க்கொழுப்பாக பேசுவதையே வாடிக்கை யாக கொண்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா 6 மாதங்கள் என ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
எச்.ராஜா மீது மொத்தம் 11 வழக்குகள் வரை உள்ள நிலையில் இதில் பெரியார் சிலையை உடைப்பேன் என்ற வழக்கி லும், கனிமொழி குறித்து அவ தூறாக பதிவிட்ட வழக்கு களிலும், தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் திங்க ளன்று தீர்ப்பளித்துள்ளது.
அதேநேரம், எச். ராஜா மேல்முறையீடு செய்வதற் காக, தண்டனையை டிசம்பர் 31 வரை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.