districts

img

சீனிவாச பெருமாள் கோயிலில் 18 ஆண்டுக்குப் பிறகு குடமுழுக்கு

கும்பகோணம், அக்.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் சுமார் 18  ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் வெள்ளிக்கிழமை மூலஸ்தான கோபுரம், ராஜ கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் கும்பத்திற்கு குட முழுக்கு நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததை ஒட்டி போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த விழாவில், நாச்சியார்கோவில் கிராமமே ஒன்று சேர்ந்து, சாதி பாகுபாடின்றி நிதியுதவி அளித்து, அனைவரும் பங்கேற்றது  குறிப்பிடத்தக்கது. இதில், நாச்சியார்கோவில் ஜமாத் இஸ்லாமிய கூட்ட மைப்பு சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. இதற்கு மயிலாடுதுறை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.