அறந்தாங்கி, மே 12-
புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கோடை சாகுபடிக்காக 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அறந்தாங்கி ஆவுடை யார் கோயில், மணமேல்குடி ஒன்றியங்களில் விவசாயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், எள் அறுவடை செய்ய இன்னும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பெய்த கனமழையால் எள் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.
எனவே, பயிர்களை வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.