திருச்சிராப்பள்ளி, ஜூலை 11-
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 14 ஆம் ஆண்டு பேரவை செவ்வாயன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க திருச்சி கிளை தலை வர் எம்.மனோகரன் தலைமை வகித்தார். பேரவையை தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பு மாநில துணைத்தலைவர் பி. சந்திரன் துவக்கி வைத்தார்.
தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். மின்துறையை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதிக்கும் பிபி-2ஐ ரத்து செய்ய வேண்டும். காசில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை உத்தரவா தப்படுத்த வேண்டும். மின்சார சட்டம் 2023-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும். தூய் மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். விதவைகள், விவாகரத்து பெற்றவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். டிசிஎல் காண்ட்ராக்ட் பணிக்காலத்தை கணக்கில் கொண்டு பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
மாநில துணை பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணி நிறைவுரையாற்றினார். முன்னதாக துணைச் செயலாளர் பி.சந்தி ரன் வரவேற்றார். வி.சிவராமன் நன்றி கூறி னார்.