districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாசுக்கட்டுப்பாட்டு  விதிகளின்படி விநாயகர் சிலைகளை கரைக்க அறிவுரை

புதுக்கோட்டை ஆக.29-  விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகளை மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின்படி கரைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை யற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்க ளால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலை களை கரைக்க அனுமதிக்கப்படுகிறது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்,எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்க ளில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதி முறைகளின்படி விநாயகர்சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவக் காப்பீடு மறுப்பு: பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம்  இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு

தஞ்சாவூர், ஆக.29-   தஞ்சாவூர் கீழவாசல், பாம்பாட்டித் தெருவை சேர்ந்த ராஜேஷ் (35). இவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம்  ரூபாய் வீதம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்ப மருத்துவக்  காப்பீடு செய்து இருந்தார். அதன் காப்பீட்டு காலம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு நவ.11 ஆம் தேதி வரையிலும், பிறகு 2022 ஆம் ஆண்டு நவ.14 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு நவ.13 ஆம் தேதி வரையிலும் காப்பீடு அமலில் இருந்தது. இந்நிலையில், ராஜேஷ்க்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்.4 ஆம் தேதி திடீரென நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.   இதையடுத்து, ராஜேஷ், தன்னுடைய மருத்துவச் செலவு 11 லட்சம் ரூபாயை கேட்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில், ராஜேஷ் பாலிசி எடுக்கும் முன்பே, நுரையீரல் நோயினால் பாதிக் கப்பட்டு இருந்ததாகவும், அப்பிரச்சனை யை மறைத்து பாலிசி எடுத்துள்ளதால், மருத்துவச் செலவினத் தொகையை வழங்க முடியாது எனக் கூறி ராஜேஷ் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.   இதனால் பாதிக்கப்பட்ட ராஜேஷ், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி, பாதிக்கப்பட்ட ராஜேஷூக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவச் செலவு 11 லட்சம் ரூபாயை, கோரிக்கை நிராகரிப்பு தேதி முதல் திரும்ப வழங்கும் தேதி வரை 9 சத வீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.   மேலும், மன உளைச்சலுக்காக 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவுத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பளித்தது. 

மாணவர் சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர், ஆக.29- இந்திய மாணவர் சங்கத்தின்  திருவாரூர் மாவட்ட  சிறப்பு பேரவை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கத்தின் மாவட்ட அலுவல கத்தில் உள்ள கூட்டரங்கத்தில்  நடை பெற்றது. பேரவைக்கு அமைப்பின்  மாவட்ட தலைவர் ப.சுர்ஜித் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் பா.ஆனந்த் வர வேற்றார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செய லாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான  மு.சௌந்தரராஜன் துவக்க உரையாற்றினார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  என்.வசந்தன், மாவட்ட செயலாளர் கே.எஸ்.செந்தில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர்.  மாணவர் சங்க மாநில செயலாளர் கோ.அரவிந்த்சாமி புதிய நிர்வாகிகளை அறிவித்து நிறைவுரையாற்றினார். தலைவராக பா.ஆனந்த், செயலா ளராக பா.லெ.சுகதேவ், துணைத் தலை வர்களாக வீ.சந்தோஷ்,சு.கெளசிகன், பா.விக்னேஷ். துணைச் செயலாளராக எம்.கே.வைகை,மு.சூர்யா, க.கலைச் செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும், அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், தனியார் கல்வி கட்டண கொள்கைக்கு எதிராக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும்,நீட் தேர்வை நீக்கிடவும் தொடர்ந்து போராட்டம் நடத்திடுதல்    உள்ளிட்ட பல்வேறு  தீர்மா னங்கள்  நிறைவேற்றப்பட்டது.

சேவைக் குறைபாடு    தனியார் தொலைக்காட்சிப் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்துக்கு  ரூ. 50 ஆயிரம் அபராதம் 

புதுக்கோட்டை, ஆக. 29 சேவைக்குறைபாட்டுக்காக தனியார் தொலைக் காட்சிப் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள மெய்யனூரைச் சேர்ந்தவர் வை. சிவகுமார். இவர், காரைக்குடியிலுள்ள ஒரு தனியார்டிவி விற்பனை யாளரிடம் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை ரூ. 32,499-க்கு வாங்கினார். 2022ஆம் ஆண்டு அந்த டிவி பழுதடைந்தது. நிறு வனத்துக்கு புகார் அளிக்கப்பட்ட போது, புதிய டிவி மாற்றித் தரப்பட்டது.  அந்த டிவியும் 16 நாட்களில் பழுதடைந்தது. இதுபோல பல முறை பழுதடைந்த போது புகார்  அளித்தும் டிவி நிறுவனத்தினரின் சேவை மையத்தில் இருந்து முறையான பதில் இல்லை.இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிவக்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் த. சேகர் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.அதில், டிவியை விற்ற விற்பனையாளரோ அல்லது டிவி நிறுவனத்தினரோ பழுதடைந்த டிவியை மாற்றி புதிது வழங்க வேண்டூம். அல்லது, டிவி வாங்கப்பட்ட தொகையை வாங்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 9 சதவிகித வட்டி சேர்த்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும். சேவைக் குறைபாட்டுடன் செயல்பட்ட காரைக்குடி யைச் சேர்ந்த விற்பனையாளர் ரூ. 20 ஆயிரத்தை இழப்பீ டாக நுகர்வோருக்கு வழங்க வேண்டும். சேவைக் குறை பாடுடன் செயல்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த தனியார் டிவி உற்பத்தி நிறுவனத்தினர் ரூ. 50 ஆயிரத்தை நுகர்வோ ருக்கு வழங்க வேண்டும். 45 நாட்களுக்குள் இந்த இழப்பீ ட்டுத் தொகையை வழங்காவிட்டால், இழப்பீட்டுத் தொகை க்கு ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும்என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.