திருவட்டார், அக். 4- கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரி ழந்த மூவரின் உடல்களும் உடற்கூராய்வு செய்து உற வினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. கர்ப்பிணியான ஆதி ராவின் உடலை பெற்றுக் கொண்ட கணவனின் கதறல் அனைவரையும் உலுக்கியது. பக்கத்து வீட்டு இரும்புக் கூரை மீது பாய்ந்த மின்சா ரம் தாக்கியதில் செவ்வா யன்று மாலை ஜெயசித்ரா (45) இவரது மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா(24) ஆகி யோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஆசா ரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் உடற்கூராய்வு செய் யப்பட்டது. புதன்கிழமை ஆதிராவின் உடலை கணவர் ஸ்ரீசுதன் பெற்றுக் கொண்டு கதறி அழுத காட்சி அனைவரையும் கதி கலங்க வைத்தது. பின்னர் அவரது சொந்த ஊரான குளச்சல் பகுதிக்கு கொண்டு சென்று அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயசித்ரா மற்றும் அஸ்வின் உடல்கள் ஆற்றூ ருக்கு கொண்டுவரப்பட்டு அவர்களது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சி யில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.