திருச்சிராப்பள்ளி, ஜூன் 8-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு சிரோன் திறன் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணி யல் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர்(பொது), 5-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 6 மாதம் வேலை முன் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது) 8ஆம் வகுப்பு படித்த வர்களுக்கு இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநராகவும், 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டு பாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ஆம் வகுப்பு படித்த வர்களுக்கு வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு மையத்தில் (6 முதல் 12 மாதம்வரை) வேலை முன் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் நிராயுதபாணி காவ லர் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.