திருவாரூர், செப்.29 - பயிர்க் காப்பீட்டுத் தொகையை கூடுத லாக அறிவித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தம்புசாமி, சிபிஐ சார்ந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி மற்றும் பல்வேறு விவசாய அமைப்பி னர் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசி னர். விவசாயிகளிடமிருந்து காப்பீட்டுத் தொகையாக ஒன்றிய அரசும், மாநில அரசும் ரூ.2319 கோடி பெற்றுக் கொண்டு, 2022-2013 பயிர் காப்பீட்டு இழப்பீடாக வெறும் ரூ.560 கோடி மட்டும் விவசாயிகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொகையை கூடுதலாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையில் உள்ள குளறுபடிகளை நீக்கி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கர்நாடகா அரசிடம் சட்ட நடவடிக்கை மூலம் உரிய வகையில் நீர்பெ றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டி ருப்பது பாராட்டத்தக்கது. கர்நாடக அரசு காவிரி ஆணையத்தின் தீர்ப்பை மதித்து தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி பேசுகையில், “மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சுகா தாரத் துறை முழு கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடவாசல் மருத்துவ மனையில், காய்ச்சல் நோயாளிகளை கவனிக்க உரிய மருத்துவர்கள் மற்றும் செவி லியர்கள் இல்லை. எனவே பொதுமக்கள் அச்ச மின்றி மருத்துவ சிகிச்சை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகா தாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள கடைக் கோடி பகுதியில் துவங்குகிறது அன்னுக்குடி வாய்க்கால். கோல்டன் நகர் என்ற இடத்தில் இந்த வாய்க்காலை ரியல் எஸ்டேட் நிறு வனம் ஒன்று ஆக்கிரமித்து மூடிவிட்டது. இந்த வாய்க்காலை உடனடியாக மீட்க வேண்டும். நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கொக்கலாடி பகுதியில் உள்ள சாரு வாய்க்கால் சட்ரஸ் பாலம் சீரமைக்கப் படாமல் உள்ளது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து களஆய்வு செய்து, 2024 இல் பாலம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.