சிங்களாந்தி 24 ஆவது வார்டில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்தது. இந்நிலையில், தற்போது பதவியேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ், இக்கோரிக்கையை நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியனிடம் முன்வைத்தார். கோரிக்கையை ஏற்று உடனடியாக சிங்கிகளாந்தி பகுதியில் புதிதாக குழாய் அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.