அரியலூரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை தேவை அரியலூர், நவ.9- அரியலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அரியலூர் நகராட்சிக்கூட்டம் கூட்டரங்கில் வியாழக் கிழமையன்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர்(பொ)விஜிகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் ராஜேஷ், புகழேந்தி, கண்ணன், அதிமுக உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி ஆகியோர் பேசுகையில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதி களில் சரிவர குப்பைகள் அள்ளுவதில்லை.சாக்கடைகள் தேங்கிக் கிடக்கிறது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. சில பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டமும் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. சாலைகளில் அதிக விபத்துக்களை ஏற்படுத்தி வரும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை இல்லை என்று குறை களை தெரிவித்தனர். இதற்கு ஆணையர் (பொ)விஜய்கா ர்த்திக் பதிலளிக்கையில், குறைகளை நிவர்த்தி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 33 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.