புதுக்கோட்டை, பிப்.20 - மாநில அளவிலான நீச்சல் போட்டி யில் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கேரள ஸ்போர்ட்ஸ் பெர்சன் அசோசி யேசன் (கெஸ்பா) மற்றும் டால்பின் ஸ்விம்மிங் அகாடெமி இணைந்து சென் னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டியை நடத்தியது. இதில் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். தனுஷ்கிருஷ்ணன் 100மீ பிரீஸ்டைல் பிரிவில் 3 ஆம் இடமும், 200மீ ப்ரீஸ்டைல் பிரிவில் 3 ஆம் இடமும், 4X50 மெட்லி ரிலே பிரிவில் முதலி டமும், 4X50மீ ப்ரீஸ்டைல் ரிலே பிரி வில் 3 ஆம் இடமும் பெற்றுள்ளார். எம்.நிஷாந்த்கிருஷ்ணன் 4X50 மீ மெட்லெட் ரிலே பிரிவில் முதலிடமும். 4X50 மீ மிக்ஸ்டு ரிலே பிரிவில் 3 ஆம் இடமும் பெற்றுள்ளார். எம்.சந்தோ ஷினி 4x50 மீ மிக்ஸ்டு ரிலே பிரிவில் முதல் இடமும், 4X50 மீ ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் 3 ஆம் இடமும் பெற்றுள்ளார். வி.தேவிகா 4X50 மீ மிக்ஸ்டு ரிலே பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று உள்ளார். தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர் களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட் டினார். பள்ளியின் ஒருங்கிணைப்பா ளர்கள் கௌரி.கோமதிபிள்ளை உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்து தெரி வித்தனர்.