புதுக்கோட்டை, ஜூன் 15-
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்கா ணிப்பு குழுக் கூட்டம் அதன் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலை வகித் தார்.
கூட்டத்தில் சு.திருநாவுக் கரசர் எம்பி கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத் தில் ஒன்றிய அரசின் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், மண்வள அட்டை இயக்கம், பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட 45 திட்டப் பணிகள் விப ரங்கள், ஒதுக்கீடு செய்யப் பட்ட நிதி விபரம், செலவு செய்யப்பட்ட நிதி விபரம், பணி விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண் டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்ன துரை (கந்தர்வகோட்டை) டாக்டர்.வை.முத்துராஜா (புதுக்கோட்டை) எஸ்.டி. ராமச்சந்திரன் (அறந்தாங்கி) மாவட்ட வருவாய் அலுவ லர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவி தப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.