districts

img

இந்தித் திணிப்பை கைவிடக்கோரிக்கை வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.27- ஒன்றிய மோடி அரசின் கட்டாய இந்தித் திணிப்பை கைவிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில்  திருச்சி, மயிலாடுதுறை, அரிய லூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்  களில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டப் பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் மோகன், மாவட்டத் தலை வர் சூர்யா ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் வாலிபர் சங்க பகுதி செயலாளர் யுவராஜ், சந் தோஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறையில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஐயப்பன், மாணவர் சங்க மாவட்டத் தலை வர் மணி பாரதி ஆகியோர் தலை மையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் அறிவழகன், மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ மற்றும் தேவேந்திரன், பவுல் சத்திய ராஜ், சபீர் அஹமது உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற சாலையிலிருந்து பேரணியாக புறப்  பட்டு தரங்கை சாலை, சின்னக்கடை வீதி வழியாக வட்டாட்சியர் அலு வலகம் வந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குகன் முன் னிலை வகித்தார். வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் துரை அரு ணன் கண்டன உரை நிகழ்த்தி னார். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் துணை தலைவர் சதீஷ், மாணவர் சங்க மாவட்டத் துணை தலைவர் சுகதேவ் தலைமை தாங்  கினர். வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சலாவுதீன், மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் கண்டன உரையாற்றினர். போராட்  டத்தில் வாலிபர் சங்க பொருளா ளர் கேசவன், துணை தலைவர் ஜெய்கிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே ஸ்டேட் வங்கி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே. சரவணன், மாணவர் சங்க மாவட் டத் தலைவர் ஆ.கருணைக்கடல் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.எம்.சக்திவேல், ரா.ராம கிருஷ்ணன், மாவட்டப் பொருளா ளர் டி.அறிவழகன், துணைச் செயலாளர் கே.வேல்முருகன் ஆகி யோர் விளக்கிப் பேசினர். நிர்வாகி கள் அருண், சடையப்பன், பாஸ்க ரன், ரமெஷ். மாவட்டக்குழு புரட்சி மணி, உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் அலுவலக வாயிலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் மு.ஜோதிபாசு ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் மற்றும்  மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்  டனர்.
புதுக்கோட்டை 
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ. குமாரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலா ளர் துரை.நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், பாண்டி யன், மாணவர் சங்க மாவட்ட நிர்வா கிகள் வசந்த், பாலாஜி, மகா லெட்சுமி உள்ளிட் 200-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.