திருச்சிராப்பள்ளி, செப்.30 - பாண்டிச்சேரியில் மின்சார வாரியத்தை தனி யார் மயமாக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், மின் வாரியத்தை தனியார்மய மாக்குவதை கைவிட கோரி யும் பாண்டிச்சேரியில் மின் வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மின்வாரிய தொ ழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வெள்ளியன்று திருச்சி தென் னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு பாண்டிச்சேரி யில் நடைபெறும் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித் தும், மின்வாரியத்தை தனி யார்மயமாக்குவதை கைவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட் டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் ஐக்கிய சங்க மண்டல செயலாளர் ராஜ மாணிக்கம் தலைமை வகித் தார். எம்பிளாய் பெட ரேஷன் மாநிலச் செயலா ளர் சிவசெல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ், வட்டத்தலை வர் நடராஜன், பொருளாளர் பழனியாண்டி, ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன் ஆகியோர் கண்ட உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொறி யாளர் கழகம், பொறியாளர் சங்கம், ஒர்க்கர்ஸ் சம்மேளனம், அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர் வாகிகள் மற்றும் தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.