districts

img

சுமைப்பணித் தொழிலாளியின் மகள்: மாநில சிலம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருச்சி கல்லூரி மாணவி

திருச்சிராப்பள்ளி, அக்.12 - மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சுமைப்பணித் தொழிலாளியின் மகளான திருச்சி பொறியி யல் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றுள் ளார்.

2024-25 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான முதல மைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 

மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை 2024-25 விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொ துப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழி யர்கள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கு தடகளம், கபாடி, இறகுப்பந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், மேசைபந்து, கோ-கோ, சிறப்பு கையுந்து பந்து, வீல்சேர், டேபிள் டென்னிஸ் மற்றும் எறிபந்து போட்டி கள் நடைபெறுகின்றன.

இதில் சிலம்பம் போட்டியில் கல்லூரி மாணவி களுக்கு இடையேயான 42-52 எடைபிரிவில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடமும், சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி மகாலெட்சுமி வென்றுள்ளார்.

மாணவி மகாலெட்சுமியின் தந்தை ரமேஷ்  திருச்சி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளியாக உள்ளார். பதக்கம் வென்ற மாணவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.