மார்த்தாண்டம், மே 12-
மார்த்தாண்டம் அருகே நெல்வேலி மாவிளையைச் சேர்ந்த தங்கப்பன் மகன் செந்தில் 35 .இவர் கொத்த னாராக வேலைபார்த்து வந்தார். திருமணமாகவில்லை. தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உண்டு
இதே பகுதியில் உள்ள பூவோட்டு குளத்தில் இவ ரது உடல் பிணமாக மிதந்தது. குளத்தின் கரை யில் சட்டையும் செல்போ னும் இருந்தது.
தகவல் அறிந்து மார்த்தா ண்டம் போலீசார் சென்று உடலை மீட்டு குழித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குடிபோதையில் குளத் தில் இறங்கிய போது தவறி விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.