தென்காசி, ஆக. 4
தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச் சரகம் சார்பில் தரணி சர்க்கரை ஆலையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேலே சென்றால்கேரளாவிற்கு உட்பட்ட செண்பகவல்லி அணைப்பகுதி உள்ளது .இந்த அணையில் உடைப்பு ஏற்பட்டதால் தென்காசி , தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங் களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரக்கூடிய நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது .
மேலும் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பல வருடங்களாக உடைப்பை சரி செய்ய விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் கோரிக்கை மனு மற்றும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் தற்போது அரசு மாறியதால் விவ சாயிகள், விவசாய சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவை ஏற்படுத்தி யுள்ளார்.
அந்த குழுவின் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவானது வெள்ளிக் கிழமை காலை அணையை பார்வையிடு வதற்கு சென்றுள்ளது. குழுவில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் வேலு மயில், சிவகிரி வட்டார விவசாய சங்கத்தின் துணைத் தலைவர் பெரியசாமி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த இரண்டு விவ சாயிகள், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் தலைவர்கள், வனச்சரக துணை இயக்குனர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் சென்றுள்ள னர். அவர்கள் கீழே இறங்கி வந்த பிறகு முழுமையான விவரங்களை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.