டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு
அரியலூர், செப்.21 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் 2 மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக் கடையில் பணியாற்றும், விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந் ததை கண்டு பதறி ஓடி னார். இதனால் மதுப் பிரி யர்கள் மதுபான கடையை விட்டு சற்று தள்ளியே நின்றனர். அதன் பிறகு அங்கி ருந்த குடிமகன் ஒருவர், அந்த சாரைப் பாம்பை லாவகமாகப் பிடித்து வெளியில் உள்ள ஏரி யில் விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பருத்தி ஏலம்
பாபநாசம், செப்.21 - தஞ்சாவூர் விற்ப னைக் குழு, பாபநாசம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமை வகித்தார். மேற்பார்வை யாளர் சிவானந்த் முன் னிலை வகித்தார். இதில் பாபநாசம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 240 விவசாயிகள் 22 மெட்ரிக் டன் பருத்தி எடுத்து வந்த னர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம், தேனி, விருதுநகர், கொங் கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 5 வணிகர்கள் கலந்துக் கொண்டு அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.8589, குறைந்தபட்சம் ரூ.6909, சராசரி ரூ.7789 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.16 லட்சம்.
நகை பறிப்பு
தஞ்சாவூர், செப்.21 - தஞ்சாவூர் அருகே யுள்ள தாளம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந் தவர் எஸ். அய்யப்பன் (42). கட்டடத் தொழிலாளி யான இவர், வியாழனன்று இரவு கட்டடப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கி ளில் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். இயற்கை உபா தையை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள தனி யார் பள்ளி எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் இவரது கழுத்தி லிருந்த 22 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூர், செப்.21 - பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடை பெற்றது. முகாமிற்கு மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்து முகாமினை தொ டங்கி வைத்து பேசி னார். அதனைத் தொ டர்ந்து பெரம்பலூர் மாவட் டத்தில் பதிவு செய்துள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் தேவையான ஆட்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்தனர். இதில் 21 இளைஞர்களுக்கு பணி வாய்ப்புக்கான ஆணை உடனே வழங்கப்பட்டது.
வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
கரூர், செப்.21 - கரூர் மாவட்டம், குளித்தலையில் பேங்க் ஆப் மகா ராஷ்டிரா வங்கியின் புதிய கிளையை கரூர் மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வங்கிகள் பொதுமக்களுக் கானது. அரசு ஒப்புதல் வழங்கும் லோன்களை பொது மக்களுக்கு விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஊழி யர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இன்முகத்துடன் நிறை வேற்றி தர வேண்டும். அதே போல் பொதுமக்களும் தாங்கள் வாங்கும் வங்கி கடன்களை தவணையை தவறாமல் திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான் வங்கிக்கும் பொது மக்களுக்குமான உறவு சிறப்பாக இருக்கும். வங்கியின் வளர்ச்சிக்கு பொதுமக்களும், பொதுமக்களின் வளர்ச்சிக்கு வங்கியும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார். வங்கியின் கோவை மண்டல மேலாளர் எஸ்.என்.பாலாஜி, குளித்தலை கிளை மேலாளர் அல்பின்ஜோசப் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
புதுக்கோட்டை, செப்.21 - அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படிப்படியாக செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றார் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி யில் சனிக்கிழமை அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு வருகின்றன. பாம்புக் கடி, நாய்க்கடி ஆகியவற்றுக்கான விஷமுறிவு மருந்துகள் இதுவரை மாவட்டத் தலைமை மருத்துவம னையில் மட்டும்தான் கிடைத்து வந்தன. தற்பொழுது அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் வரை இந்த மருந்துகள் கிடைக்க நட வடிக்கை எடுத்துள்ளோம். 108 ஆம்புலன்ஸ் சேவையில் குறை பாடு இருப்பதாக இதுவரை எந்தப் புகாரும் இல்லை. குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட் டால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னையில் முதல் முறையாக அரசு செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை தொடங்கி யிருக்கிறோம். அடுத்தபடியாக மதுரையில் தொடங்கப்படும். படிப்படியாக அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றார். பேட்டியின் போது சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இணையவழி வர்த்தகம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.29.70 லட்சம் மோசடி
தஞ்சாவூர், செப்.21 - தஞ்சாவூர் மாவட்டத்தில் இணையவழி வர்த்தகம் எனக் கூறி தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) ஊழியரிடம் ரூ.29.70 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வரு கின்றனர். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 39 வயது தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியருக்கு, கடந்த ஜூலை மாதம் வாட்ஸ் ஆப் செயலில் இணையவழி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என தகவல் வந்தது. இதை நம்பிய ஊழியர் அதிலிருந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே சென்றார். அதன் மூலம் வாட்ஸ் ஆப் குழு வில் இணைந்தபோது, அதில் 200 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர், இவரை தொடர்பு கொண்டு, இணையவழியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக் கும் எனக் கூறி வங்கிக் கணக்கை அனுப்பினார். இதை நம்பிய ஊழியர் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பத் தொடங்கினார். முதலில் சிறு, சிறு தொகை கிடைத்ததை நம்பிய ஊழியர், பல்வேறு தவணைகளில் ரூ.29.70 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு எதிர்முனையில் உள்ள மர்ம நபர் இவரது கைப்பேசி அழைப்பைத் துண்டித்து விட்டார். இதனால் ஏமாற்றமடைந்த ஊழியர் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறை யினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருக்குறள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்கள் விருது பெற அழைப்பு
தஞ்சாவூர், செப்.21- திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வு களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அறக்கட்டளை தலைமை செயல் அலுவ லர் முனைவர் இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருக்கு றள் மற்றும் திருவாசகம் ஆய்வாளர்களுக்கு விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இதற்காக உரிய ஆய்வாளர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை அறக்கட்டளையின் இணையதளமான www.tnfindia.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 10.10.2024 (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள், தமிழ்நாடு அறக்கட்டளை, எண்: 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு கிடைக்கப் பெறுமாறு அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு லோன்மேளா நடத்த முடிவு
தஞ்சாவூர், செப்.21- தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள், உதவி திட்ட அலுவ லர்கள், சமுதாய அமைப்பாளர்கள், வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பா ளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகளிர் திட்டம் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவாக செய்திட அறிவுறுத்தப்பட்டது. அனைத்து வட்டாரங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குவது தொடர்பாக, ஒவ்வொரு மாதமும் 2 ஆம் வாரத்திற்குள் தகுதியுள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கு தர மதிப்பீடு முடித்து 4 ஆம் வாரம் புதன்கிழமை லோன்மேளா நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோட்டாட்சியர் வாகனம் மோதி இருவர் பலி
புதுக்கோட்டை, செப்.21 - புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியரின் வாகனம் மோதி, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தனது அரசு வாகனத்தில் திருமயம் வட்டாட்சியர் அலுவ லகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டார். திருச்சி- காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள லெம்பலக்குடி சுங்கச் சாவடியைக் கடந்து, நகரத்துப்பட்டி அருகே சென்ற போது, எதிரே வந்து திடீரெனத் திரும்பிய இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்திலுள்ள பள்ளத்தில் தூக்கியெறியப்பட்டது. அந்த வாகனத்தில் வந்த பீகாரைச் சேர்ந்த பைசல், பயாஸ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த வருவாய்க் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் காமராஜுவும், லேசான காயமடைந்த கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யாவும் புதுக்கோட்டையி லுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். ஓட்டுநர் காமராஜுவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன. நமணசமுத்திரம் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லயன்ஸ் சங்கம் நடத்திய கண் சிகிச்சை முகாம்
கும்பகோணம், செப்.21 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில், நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம், கும்பகோணம் கோஸ்ட் லைன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்ற னர். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் பார்வை குறைபாடு கண்ணாடி வழங்கு தல், கண்ணில் படர்தாமரை அறுவை சிகிச்சை செய்தல், கண்ணில் ரத்த அழுத்தம் கண்டுபிடித்தல், ரத்த பரிசோ தனை உள்ளிட்ட சிகிச்சைகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்தனர். இதில் 81 பேரை இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து: 8 பேர் காயம்
பாபநாசம், செப்.21- சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அய்யம்பேட்டை பைபாஸ் அருகில் சாலையோரம் கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான ஏசி பேருந்து ஒன்று, சென்னையில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் நோக்கி சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அய்யம்பேட்டை பைபாஸ் அருகில் சாலை யோரம் எதிர்பாராமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேரில் நிஷா, ரவிச்சந்திரன், ராஜேஷ்குமார், பிரகதீஷா, ராஜேஸ்வரி, முகமது அனிபா, வினோத் உள்ளிட்ட 8 பேர் காயமடைந் தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநரான ஜெயங்கொண் டத்தைச் சேர்ந்த பழனிவேலு அங்கிருந்து தப்பித்துவிட்டார். நடத்துநர் ஜெயமாலபுரம் களிமேடு பகுதியைச் சேர்ந்த வினோத் விபத்து நடந்த இடத்தில் இருந்தார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போதையில்லாத தமிழ்நாடு குறும்படங்கள் திரையிடல்
பெரம்பலூர், செப்.21 - பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ‘போதைப் பொருட்கள் பயன் படுத்த மாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களும் தொடர்ந்து திரையிடப்படுகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக சனிக் கிழமை பெரம்பலூர் மாவட்டம், இரூர் பேருந்து நிலையம், நாட்டார்மங்கலம், குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களின் முக்கிய இடங்களில் பொது மக்கள் காணும் வகையில் போதையில்லாத தமிழ்நாடு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இக்குறும்படங்களை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.