நாகர்கோவில், ஆக. 17-
நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் வியா ழக்கிழமை காலை மீன் ஏற்றி வந்த சிறியரக சரக்கு வாகனம் டயர் வெடித்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரியில் இருந்து தக்கலை நோக்கி மீன் ஏற்றி வந்தபோது மினி டெம்போவின் முன் டயர் வெடித்த தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. கொண்டுவந்த மீன்கள் ரோட்டில் சிதறிக் கிடந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபற்றி நெடுஞ்சாலை ரோந்து படை காவலர்களுக்கும், இரணியல் காவல் நிலையத்துக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காவலர்கள் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ததுடன் நடுரோட்டில் கிடந்த மினி டெம்போவை அப்புறப்படுத்தினார்கள். இதுதொடர்பாக இரணியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.